Posts

நகைச்சுவை: ஜோக்

ஜோக்: ”எந்த ஒரு கூட்டணியும் நம் கட்சியை தங்களுடன் சேர்த்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தினாலும், அப்படியே சேர்த்துக்கொள்ள முன்வந்தாலும் நாம் கேட்கிற அளவுக்கு தொகுதியை பங்கு தராத காரணத்தினாலும், இனிமேல் நேரடியாகவே எங்களுக்கு, சட்டசபையில் 33.3 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யுமாறு, மாண்புமிகு கவர்னர் அவர்களை கேட்டுக்கொள்ளுகிறோம்”.

நகைச்சுவை: அட போங்க சார்

ஜோக்: அட போங்க சார். என் பையன் மார்க்கை ரேங்க் மாதிரியும், ரேங்கை மார்க் மாதிரியும் வாங்குறான். என்னத்தை சொல்றது..! இந்த ஜோக்கைப் பற்றி...

சிறுகதை: சில்லரை இல்லீங்க

(In Facebook - சில்லரை இல்லீங்க) அது ஒரு சனிக்கிழமை காலை பதினொரு மணி... லக்‌ஷணா தனது கிச்சனில் பிஸியாக இருந்தாள். அந்த அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டில் முதல் மாடியில் உள்ளது அவள் ஃபிளாட்.     எங்கே இன்னும் அவரைக் காணோம் என்று ஜன்னல் வழியாக பார்த்தாள். கரெக்டாக சொல்லிவைத்தது போல், அப்போதுதான் தனது பைக்கில் அப்பார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளே நுழைந்த சந்தானம் அதை தனது ஃபிளாட் அருகினில் பார்க் செய்தான். சந்தானம்..லக்‌ஷணாவின் கணவன்.  

சிறுகதை: தண்டனை

(In Facebook - தண்டனை) ஒரு மன்னர் இருந்தார். அவருக்கு சட்டம் ஒழுங்கு மிகவும் முக்கியம். அதனாலே தனக்கு அறிவுரை கூற நிறைய மந்திரிகளை நியமித்திருந்தார். அவர்களில் தலைச்சிறந்த ஒரு அறிவாளியை முதன்மந்திரியாக நியமித்திருந்தார்.  ஒரு நாள் சபையினில்....  

நகைச்சுவை: கவுண்டமணி & செந்தில்

கவுண்டமணி: டேய் நியூஸ் படிக்கிறேன். கேளுடா..! நியுயார்க்கில் ‘ஸேண்டி’ புயல். தமிழ் நாட்டில் ‘நீலம்’ புயல். செந்தில்: அண்ணே. எனக்கு ஒரு சந்தேகம்.

நகைச்சுவை: டவுசர்

(In Facebook - டவுசர்) ஏதாவது ஒரு ஃபங்ஷனில் நீங்கள் நோட் பண்ணியிருப்பீர்கள். குறிப்பாக பெண்களிடம் இந்த பழக்கம் உண்டு. அதாவது மற்றவர்கள் நல்ல உடையணிந்து வந்தால் அதை வாய்விட்டு அவர்களிடமே  தன் பாராட்டுகளை தெரிவிப்பது.  கீழ்கண்ட கான்வெர்சேஷன்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.  ‘மாமீ, உங்க சாரீ ரொம்ப அழகா இருக்கு. எங்கே வாங்கினீங்க?’   

சிறுகதை: கஷ்டமர்

(In Facebook - கஷ்டமர்) ‘ஹலோ. இது என்ன மெனு கார்டு. நல்லாவே இல்லை. இந்த ஏரியாவுலே பெரிய பாஷ் ரெஸ்டாரெண்டுன்னு சொன்னாங்க. ஆனா மெனு கார்டுலேயே உங்க லட்சணம் தெரியுது. உங்க மேனேஜரை கூப்பிடுங்க’ என்று சர்வரிடம் சொன்னாள் ஸ்வர்யா. டை கட்டிக்கொண்டு, ரொம்பவே டிப்டாப் ஆக இருந்த அந்த சர்வர் (அவன் இளைஞன் என்பதால் சர்வன் என்று சொல்லலாமோ?) சற்று திணறித்தான் போனான்.